சோனியா, மன்மோகனுடன் வைகோ சந்திப்பு
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துபல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வைகோ, கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நதி நீர்இணைப்புத் திட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதாக வைகோவிடம் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.
பின்னர் சோனியாவையும் வைகோ சந்தித்தார். அப்போது, திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை 45 நாட்கள் பாதயாத்திரைமேற்கொள்ள தான் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார் வைகோ.
வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கையும் சந்தித்த வைகோ, பெங்களூரில் நடந்த உலகத் தமிழர் பேரவை மாநாட்டில்கலந்து கொள்ள வருகை தந்த இலங்கை தமிழ் எம்.பி ஈழவேந்தன், சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கேதிருப்பி அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications