எதிர்க் கட்சிகள் குறித்து காளிமுத்து கிண்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைக் கூட்டத் தொடர் எனது வீட்டுக் கல்யாண நிகழ்ச்சி அல்ல, பாக்கு வெற்றிலை வைத்து அழைப்பதற்கு, அவர்களாகத்தான்கூட்டத்திற்கு வர வேண்டும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
சட்டசபையில் பாஜக உறுப்பினர் எச்.ராஜா பேசுகையில், ஒரு பார்மாலிடிக்குக் கூட எங்களை சபாநாயகர் அழைக்கவில்லை என்றுகாங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் குறைபட்டுள்ளாரே என்று கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, கல்யாணத்திற்குத்தான் பாக்கு வெற்றிலை வைத்து அழைப்பார்கள். இது எனது வீட்டுக்கல்யாண நிகழ்ச்சி அல்ல, சட்டசபைக் கூட்டத் தொடர். அவர்களாகத்தான் கூட்டத்திற்கு வர வேண்டும். யாரும் அழைப்பார்கள் என்றுஎதிர்பார்க்கக் கூடாது என்றார் கிண்டலாக.












Click it and Unblock the Notifications