கிருஷ்ணாவை சிபிஐ விசாரிக்க அதிமுக கோரிக்கை
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு ரூ. 20 கோடி வழங்க, முத்திரைத் தாள் மோசடி மன்னன்தெல்கியிடம் பணம் வசூல் செய்யப்பட்டது குறித்து முன்னாள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம்சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அம் மாநில அதிமுக கூறியுள்ளது.
இது தொடர்பாக பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு கொடுக்கவும் கர்நாடக மாநில அதிமுக முடிவுசெய்துள்ளது.
இந்த விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும்தொடர்பிருப்பதாக முன்னாள் காவல் துறை அதிகாரி சங்கராம் கூறியுள்ள குற்றச்சாட்டின்அடிப்படையில் விசாரணை நடத்துவது அவசியம் என அதிமுக கூறியுள்ளது.
பெங்களூரில் நடந்த அம் மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
அதே நேரத்தில் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் புகுந்து தமிழர்களுக்கு எதிராக கன்னடர்கள் கலாட்டாசெய்தது குறித்து அதிமுக கூட்டத்தில் விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை.