பராகுவேயில் பயங்கர தீ விபத்து: 300 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அசுன்சியன்:
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் தலைநகர் அசுன்சியனில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்டமிக பயங்கரமாக தீ விபத்தில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தீயில் ஒரு மாடியே இடிந்து விழுந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த சூப்பர்மார்க்கெட் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தது. பல மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
நேற்று பிற்பகலில் ஆரம்பித்து இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானதீயணைப்பு வண்டிகள் நெடு நேரம் போராடித் தான் தீயை அணைத்தன.
தீ விபத்துக்குப் பின் வெடிச் சத்தம் கேட்டதாக சிலர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications