கூரைகளை நீக்க பள்ளிகளுக்கு நீதிமன்றம் கெடு
சென்னை:
பள்ளிகளில் உள்ள கூரைகளை இம் மாத இறுதிக்குள் நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தையடுத்து, ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கூரைகொட்டகைகள் இருக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளின் சங்கத் தலைவர் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாகவே கும்பகோணத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அரசு உதவி பெறும்பள்ளிகளில் மட்டுமே மதிய உணவு தயார் செய்யப்படுகிறது.
ஆங்கிலப் பள்ளிகளை பாதுகாப்பாகவே நடத்துகிறோம். இவற்றில் 10 சதவீதம்தான் கூரை கொட்ட கைகள்உள்ளன. அரசு அறிவித்துள்ளப்படி ஜூலை 31-ம் தேதிக்குள் கூரைகளை அகற்ற கால அவகாசம் போதாது. எனவேகால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியம் மேலும் 1 மாத கால அவகாசம் அளித்து உத்தரவு விட்டார்.ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கூரைகள் அகற்றப்படாவிட்டால் அந்தப் பள்ளிகள் மீது அரசு ச்டடப்பூர்வ நடவடிக்கைமேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications