For Daily Alerts
Just In
திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை: அரசு
பெங்களூர்:
திருமணத்துக்கு முன் மணமகன், மணமகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டம்கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான வரைவுத் திட்டம் ஒன்றை அனைத்து மாநில அரசுகளின் பரிசீலனைக்கும் மத்தியஅரசு அனுப்பி வைத்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் கருத்தையும் அறிந்த பின் இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
இத் தகவலை கர்நாடக சட்ட மேலவையில் பேசிய அவை முன்னவரும், நீர்வளத்துறைஅமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
மத்திய அரசு அப்படிப்பட்ட சட்டம் கொண்டு வராதபட்சத்தில் கர்நாடக அரசே ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துமாநிலத்தில் அமலாக்கும் என்றார் கார்கே.
Comments
Story first published: Tuesday, August 3, 2004, 5:30 [IST]