ஆஸ்திரேலிய விபத்து: 2 இந்திய மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் இரு இந்தியமாணவர்கள் பலியாயினர்.
ஆந்திராவைச் சேர்ந்த பிரதாப் செகன் (24), டெல்லியைச் சேர்ந்த பிரதீப் சிங் (29) ஆகிய இருவரும்சென்ற கார் மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் இந்த இருவருமேபலியாகிவிட்டனர்.
மெல்போர்னின் வட-கிழக்கு புற நகரான செர்போர்ன் என்ற இடத்தில் 1.30 மணியளவில் இந்தவிபத்து நடந்தது. பலியான செகன், லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது 12,800 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications