சமையல் காஸுக்கு வரி விலக்கு கோரும் அய்யர்
பெங்களூர்:டெல்லி:சமையல் எரிவாயு, மண்ணெண்ணைய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று பிரதமர்மன்மோகன் சிங்குக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
சமையல் எரிவாயு மீது விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக நீக்குவதன் மூலம்மத்திய அரசின் வருவாய் பாதிக்காது. ஏனெனில் குறைந்த அளவு சமையல் எரிவாயுவையே நாம் இறக்குமதிசெய்கிறோம். அதே நேரத்தில் கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கு விதிக்கப்படும் 10 சதவீத இறக்குமதி வரிஅப்படியே தொடரலாம்.
இறக்குமதி வரி காரணமாக சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.68.90ம், மண்ணெண்ணைய்விலையை லிட்டருக்கு ரூ.3.71ம் உயர்த்த வேண்டியுள்ளது.
இந்த வரியை 5 சதவீதமாகக் குறைத்தாலும் கூட சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.45ம்,மண்ணெண்ணைய் விலையை லிட்டருக்கு ரூ.2.50ம் உயர்த்த வேண்டியதிருக்கும்.
இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டால், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.11.95ம்,மண்ணெண்ணைய் விலையை லிட்டருக்கு 61 பைசா மட்டும் உயர்த்த வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார்அய்யர்.