பி.இ: சுய நிதி கல்லூரிகள் சேர்க்கை சிக்கல் நீடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பி.இ. மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய ரேங்க் பட்டியலிலும் திருப்பூர், ஈரோடு மாணவர்களேமீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் மேமாதம் வெளியிடப்பட்டன. ஆனால், அந்தக் கேள்வித் தாளில் 5 கேள்விகள் தவறாக இருந்ததால்அதற்கு அளிக்கப்பட்ட பதில்களுக்கான மதிப்பெண்கள் குறித்து குழப்பம் நிலவியது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது. இதையடுத்து 5 கேள்விகளையும் மறுமதிப்பீடு செய்து, அதற்கான மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி மீண்டும் விடைத் தாள்கள் திருத்தப்பட்டு, புதிய மதிப்பெண்கள் பட்டியலும்வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் நுழைவுத் தேர்வு எழுதியமாணவர்களின் ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பட்டியலின்படி திருப்பூர் மற்றும் ஈரோடு மாணவர்களே மாநில அளவில் முதலிடத்தைப்பிடித்துள்ளனர்.

கடந்த மே மாதம் வெளியான ரேங்க் பட்டியலின்படி திருப்பூரைச் சேர்ந்த மாணவி விக்னேஷ்300க்கு 298.16 கட்-ஆப் மார்க் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்தார். அவரே தான் புதியபட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஈரோடு மாணவர் நரேந்திரன் 297.48 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.கடந்த ரேங்க் பட்டியலிலும் இவர் இரண்டாம் இடத்தில் இருந்தார்.

சென்னை மாணவர் ராஜகணேஷ் 297.33 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.இவர்கள் மூவருமே பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசனில் சேரவே விருப்பம்தெரிவித்துள்ளனர்.

சுய நிதி கல்லூரிகள் சிக்கல் நீடிப்பு:

மகா குழப்பத்துக்குப் பின் ஒரு வழியாய் இறுதி ரேங்க் பட்டியல் வெளியாகிவிட்டாலும் கூட சுயநிதிக் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மாணவர் சேர்க்கை குறித்த சிக்கல் இன்னும்நீடிக்கிறது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், தமிழ்நாடு சுயநிதிப்பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பினர் நுழைவுத் தேர்வை நடத்தி முடிவுகளைவெளியிட்டுள்ளனர்.

இந்த முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்என்றார்.

தனியார் கல்லூரிகள் சார்பில் ஆஜரான கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார், தேர்வு முடிவுகளைவெளியிட்டுவிட்டாலும், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்றார்.

இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+