முத்திரைத் தாள் மோசடி: ஜாமீன் கோரும் சங்கர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளஉதவி போலீஸ் கமிஷனர் சங்கர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளார்.
முன்னாள் சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, மதுரை எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி ஆகியோருடன் சங்கர் கைதுசெய்யப்பட்டார்.
இதில் அலி இருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இரு முறையும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.இந் நிலையில் சங்கர் சார்பில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு சிபிஐ தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வரும் 9ம் தேதி ஜாமீன்மனு மீதான விசாரணை நடைபெறும் என நீதிபதி அருள்ராஜ் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications