விவசாய கடன் வட்டி: ஜெ. அடுத்த சலுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை 9 சதவீதமாகக்குறைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு பயிர்க் கடன்களுக்கான வட்டி 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. நடப்புஆண்டில் இது 9 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கான கடன் ரூ.688 கோடியிலிருந்து ரூ.1,037கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

1999ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்க்கு முன்பு தங்களது குறுகிய காலப் பயிர்க் கடன்களை மத்திய காலக் கடன்களாகமாற்றிக் கொண்ட விவசாயிகள், மத்திய காலக் கடன்களின் தவணைகளைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.இவர்களுக்காக ஒரு புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

அதன்படி விவசாயிகளுக்கு இந்தத் தொகைக்கு முழு வட்டித் தள்ளுபடி அளிக்கப்படும். மேலும் 2 ஆண்டுகளுக்குஅசல் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதன் பின்னர் சம அளவிலான 5 ஆண்டுத்தவணைகளில் இதைத் திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்குத் தேவையான ரூ.68.95 கோடியை தமிழ்நாடுமாநிலக் கூட்டுறவு வங்கிக்கு தமிழக அரசு கடனாக அளிக்கும்.

கூட்டுறவு நூற்பு ஆலைகள் இயங்காத நிலையில் அவற்றுக்குக் கடன் வழங்கிய மாவட்ட கூட்டுறவு வங்கிகள்பாதிப்படைந்துள்ளன. இந்தக் கடன் சுமையை தமிழக அரசு ஏற்க முடிவு செய்துள்ளது. கடன்களைத் திருப்பிச்செலுத்த வசதியாக கூட்டுறவு நூற்பாலைகளுக்கு ரூ.76.57 கோடி கடன் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு வறட்சி காரணமாக விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் அபராதத் தொகை தள்ளுபடிசெய்யப்பட்டது. இதனால் கூட்டுறவு வங்கிகளுக்குத் தரப்பட வேண்டிய தொகையில் மீதமுள்ள ரூ.40 கோடியைரொக்கமாக தமிழக அரசு வழங்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+