இன்னொரு மத்திய அமைச்சரும் கைதாகிறார்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் சிபு சோரன், கொலை வழக்கில் நீதிமன்றத்தால் வாரண்ட்பிறப்பிக்கப்பட்டு, சரணடைந்து, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்னொரு மத்தியஅமைச்சராக சந்திரசேகர ராவைக் கைது செய்யவும் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஆந்திராவில் தனி மாநிலம் கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை உருவாக்கி, காங்கிரசுடன்கூட்டணி அமைத்து பெரும் வெற்று பெற்றவர் சந்திரசேகர ராவ்.

மத்திய அமைச்சராக உள்ள இவர் மீது வழக்கறிஞர் பிரகலாத் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.அதில், மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய சமிதி சார்பில் போட்டியிட விரும்பி மனுகொடுத்தவர்களிடம் ஏராளமான பணத்தை வசூல் செய்தார் ராவ்.

இவர்களில் பலருக்கு போடடியிட சீட்டும் தரவில்லை, வாங்கிய பணத்தையும் தரவில்லை. அவ்வாறுபணத்தை இழந்தவர்களில் நானும் ஒருவன். நாங்கள் கொடுத்த பணத்தை கட்சி நிதியிலும் ராவ்சேர்க்கவில்லை. அவரே சுருட்டிவிட்டார் என்று கூறியிருந்தார்.

இதனை விசாரித்த ஹைதராபாத் பெருநகர நீதிமன்ற நீதிபதி, மத்திய அமைச்சர் ராவைநீதிமன்றத்தில் ஆஜராகவும், அவருக்கு எதிராக ஜாமீன் பெற முடியாத வாரண்டையும் பிறப்பித்தார்.

ராவ் நீதிமன்றத்தில் ஆஜராகாத பட்சத்தில் அவர் கைது செய்யப்படக் கூடும்.

இதற்கிடையே, இந்த வாரண்டை ரத்து செய்யக் கோரி ராவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+