பெண் காவலரை "ஜாலி"க்கு அழைத்த வாலிபர் கைது !
காஞ்சீபுரம்:
பஸ் நிலையத்தில் காத்திருந்த பெண் காவலரை விபசாரத்திற்கு அழைத்த குடிகார வாலிபரை அந்தக் காவலர்,அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள உத்திரமேரூரைச் சேர்ந்த பிரபாவதி, ஆயுதப்படையில் காவலராக உள்ளார். இவருக்குகாஞ்சிபுரத்தில் பணி கொடுக்கப்பட்டிருந்தது.
பணியை முடித்து விட்டு நேற்றிரவு 8 மணியளவில் உத்திரமேரூர் போவதற்காக பஸ் நிலையத்தில் பிரபாவதிகாத்திருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு பார்த்திபன் என்ற வாலிபர் வந்தார்.
தனியாக நன்றிருந்த பிரபாவதியைப் பார்த்ததும் அவருக்குள் உசுப்பேறியுள்ளது. அருகில் சென்ற அவர், நூறுரூபாய் தருகிறேன், ஜாலியாக இருக்கலாமா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டதும் கொதித்துப் போன பிரபாவதி, பார்த்திபனை நடு ரோட்டில் வைத்து அடித்து, உதைத்தார்.பின்னர் அவனை தரதரவென இழுத்துச் சென்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.