தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கனமழை
சேலம்:
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 3வது நாளாக கன மழை பெய்து வருகிறது.
கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்குப் பகுதி மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் முக்கியமான அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நீலகிரியில் கன மழையால் குளிரும் மிக அதிகமாகியுள்ளது. ஆங்காங்கு நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.இதனால் அம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள்வெளியே செல்ல முடியாமல் ஹோட்டல் அறைகளில் அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் நல்ல மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில்தற்போது 75 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5,960 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கேரளம், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், பிகார், உத்தராஞ்சல் மாநிலங்களிலும் பலத்தமழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் தடுப்பு அணை உடைந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் பரூச், சூரத்மாவட்டங்களில் பலத்த மழை, வெள்ளத்துக்கு 21 பேர் பலியாகிவிட்டனர். இம் மாவட்டத்தின் பெரும்பாலானபகுதிகள் வெள்ளித்தில் மூழ்கியுள்ளன.
உத்தராஞ்சலில் தெஹ்ரி அணைக் கட்டுப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு பலர்பலியாகியுள்ளனர்.
கர்நாடகத்தில் குடகு மாவட்டம், கேரளாவின் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்வதால்கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீரைத் திறந்து வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகம்உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து வெகுவாக அதிகரிக்கும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.