கற்பழிப்பு புகார்: திருச்சி கமிஷனரிடம் சேரன் மனு
திருச்சி:
திருச்சி பெண் நிஷா தன் மீது சுமத்திய கற்பழிப்புப் புகார் பொய்யானது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதால், இந்த பொய்யான புகாரைக் கொடுக்க நிஷாவைத் தூண்டியது யார் என விசாரிக்க வேண்டும் என்றுகோரி திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் இயக்குநர் சேரன் மனு கொடுத்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த நிஷா என்ற பெண், இயக்குநர் சேரனும், தங்கர்பச்சானும் தன்னைக் கற்பழித்து விட்டதாகபரபரப்புப் புகார் கொடுத்தார். இதனை சேரனும், தங்கர் பச்சானும் உடனடியாக மறுத்தனர். தங்களது பெயரைக்கெடுப்பதற்காக சிலரது தூண்டுதலின்பேரில் கொடுக்கப்பட்டுள்ள பொய்யான புகார் என ஆவேசமாகதெரிவித்தனர்.
இந் நிலையில், திருச்சி சென்ற சேரன், அங்கு மாநகர காவல்துறை ஆணையர் சுந்தரமூர்த்தியை சந்தித்து மனுஒன்றைக் கொடுத்தார். அதில், நிஷா என்ற பெண் என் மீது கூறிய புகார் பொய்யானது என்று போலீஸ்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்தப் பெண் என் மீது கூறிய புகார் காரணமாக மனதளவில் நான் நிறைய பாதிக்கப்பட்டுள்ளேன். எனது பெயரும்கெட்டுள்ளது.
எனவே புகார் கொடுத்த பெண்ணின் மீதும், அந்தப் பொய்யான புகாரைக் கொடுக்க பின்னணியில் இருந்தவர்கள்யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்தப் புகார் மனு குறித்து விசாரணை நடத்துமாறு ஆணையர் சுந்தரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.