கடைசி நேரத்தில் நிபந்தனைகளுடன் கிடைத்த அனுமதி
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடை பயணத்துக்கு போலீசார் கடைசி நேரத்தில் தான்அனுமதி தந்தனர். அதுவும் பல வித நிபந்தனைகளுடன்.
நடை பயணம் குறித்து போலீஸ் தலைமையகத்துக்கு மதிமுக சார்பில் கடிதம் தரப்பட்டிருந்தது.வைகோவுடன் மைக், ஸ்பீக்கருடன் கூடிய வாகனம் செல்லவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
ஆனால், நேற்றிரவு வரை போலீசாரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைக்கவில்லை. அனுமதிகுறித்து மதிமுகவினரும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அனுமதி கிடைக்காவிட்டாலும் நடைபயணத்தைத் துவக்கிவிடும் முடிவில் இருந்தார் வைகோ.
இந் நிலையில் இரவோடு இரவாக நெல்லை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்னைகாவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இருந்து பேக்ஸ் அனுப்பப்பட்டது. அதில், போக்குவரத்துக்குஇடைஞ்சல் இல்லாமல் நடை பயணம் நடத்தலாம், வைகோவுடன் ஒரே ஒரு வாகனம் மட்டுமேமைக் கட்டி செல்லலாம் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் நடை பயணத்தைத் தொடர்ந்து செல்லலாம் என்றும்போலீஸ் தலைமையகம் அனுமதித்துள்ளது.












Click it and Unblock the Notifications