கோவையில் கிளையை தொடங்கும் விப்ரோ
பெங்களூர்:
விப்ரோ சாப்ட்வேர் நிறுவனம் கோவையில் புதிய கிளையைத் துவக்க முடிவு செய்துள்ளது. இதற்காகதமிழக அரசிடம் 25 ஏக்கர் நிலத்தைக் கோரியுள்ளது. அதேபோல தனது சென்னை கிளையைவிரிவாக்க 85 ஏக்கரும் கோரியுள்ளது.
சென்னை விப்ரோவில் இப்போது 5,000 சாப்ட்வேர் வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தஎண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்தவும் விப்ரோ முடிவு செய்துள்ளது.
இன்று பெங்களூரில் விப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜியை தமிழக தகவல்தொழில்நுட்பத்துறைச் செயலாளர் விவேக் ஹரிநாராயணன் சந்தித்துப் பேசினார். அப்போதுதமிழகத்தில் விப்ரோ நிறுவன விரிவாக்கத்தை மேற்கொள்ளும்படி விவேக் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனது கிளையை மேலும் விரிவாக்க 85 ஏக்கர் நிலமும்,கோவையில் புதிய கிளையைத் தொடங்க 25 ஏக்கரும் வழங்குமாறு பிரேம்ஜி கோரிக்கை வைத்தார்.
இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்கும் என்று தெரிகிறது. நிலத்தையும் குறைந்தவிலையில் வழங்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications