For Daily Alerts
Just In
விரைவில் தேர்தல் வரும், கூறுகிறார் ஸ்டாலின்
திண்டுக்கல்:
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வந்து விடும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதாதலைமையில் அராஜக, அட்டூழிய, கொடுங்கோல் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் ஆதரவுமுற்றிலும் இல்லை.
ஜனநாயக விரோதமான இந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பில்லை. அவர்களது குரல் வளைகள்நெரிக்கப்படுகின்றன. சட்டசபையில் பேசக் கூட அவர்களுக்கு அனுமதி இல்லை.
இத்தனை குறுகிய காலம் ஒரு சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்திருப்பது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்என்றார் ஸ்டாலின்.
Comments
Story first published: Friday, August 6, 2004, 5:30 [IST]