கொளத்தூர் மணி திடீர் கைது
சேலம்:
பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணியை போலீசார் இன்று அதிகாலை கொலை முயற்சி வழக்கில்திடீரென்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் உரக்கடை வைத்திருப்பவர் கிருஷ்ணன். இவரது உரக்கடைக்கு நேற்றிரவு சிலர் வந்து கிருஷ்ணனையும், அவரது மகன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர்.
படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேட்டூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, அவரதுதம்பி பழனிச்சாமி மற்றும் சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணனின் மகள் சமீபத்தில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம்தொடர்பாக கொளத்தூர் மணி கிருஷ்ணனிடம் சமரசம் பேசியதாகவும், இதற்கு கிருஷ்ணன் உடன்படாததால்தான்அவர் தாக்கப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து இன்று அதிகாலை கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு மேட்டூர் நீதிபதியின் வீட்டில்ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடம் இருந்து மீட்பதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுக்குஉறுதுணையாக இருந்தவர் மணி. ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு காட்டிலிருந்து வெளியே வந்தவுடன் தங்கியதும்மணியில் தோட்ட வீட்டில் தான்.
வீரப்பன் விஷயத்தில் மணி மீது போலீசார் பல வழக்குகள் போட்டு கைது செய்துள்ளனர். இப்போது அவர் மீதுகொலை முயற்சி வழக்குப் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications