For Daily Alerts
Just In
மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நாளை தொடக்கம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் 3 நாள்மாநாடு நாளை காலை தொடங்குகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் கட்டடத்தின் 10-வது தளத்தில் மாநாடுநடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாளான நாளை, ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளும்கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.
காவல் துறை அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம் நாளை மறுநாள் காலை நடைபெறுகிறது.ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நாளை மறுநாள் பிற்பகலிலும், அதற்கு அடுத்த நாள் காலையிலும்நடைபெறுகிறது.
Comments
Story first published: Sunday, August 8, 2004, 5:30 [IST]