இராக்: பிணைக்கைதிகளை விடுவிக்க புதிய நிபந்தனை
பாக்தாத்:
தங்கள் வசமுள்ள பிணைக்கைதிகள் 7 பேரை விடுவிக்க இராக் தீவிரவாதிகள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.
குவைத் மற்றும் கல்ப் லிங்க்ஸ் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்த 3 இந்தியர்கள் உட்பட 7 பேரை கடந்த 21ம்தேதி இராக் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இவர்களை விடுவிக்க, இராக்கில் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவும், அமெரிக்க ராணுவநடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட 250 பேருக்கு இழப்பீடு வழங்கவும் குவைத் லாரி நிறுவனத்தை தீவிரவாதிகள்நிர்பந்தப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பெருமளவு பணத்தையும் எதிர்பார்க்கின்றனர். பிணைக்கைதிகளை மீட்க, தீவிரவாதிகள் கேட்கும்பணத்தை தர குவைத் லாரி நிறுவனம் ஒப்புக் கொண்டது.
தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் துலாய்மியும், லாரி நிறுவன அதிகாரிகளும் நேரடிப்பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து பிணைக்கைதிகள் விரைவில்விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில், தீவிரவாதிகள் மேலும் ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளனர். இதுகுறித்து லாரி நிறுவனத்தின்செய்தித் தொடர்பாளர் அபு சைனே கூறுகையில்,
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில், பிணைக்கைதிகள் எந்நேரமும் விடுவிக்கப்படலாம் என்று நாங்கள்எதிர்பார்த்து வந்தோம். ஆனால் இப்போது புதிதாக ஒரு நிபந்தனையை விதித்துள்ளனர்.
எங்கள் நிறுவன ஊழியர்களை விடுவிக்க, எந்த நிபந்தனை விதித்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றுஅவர்கள் கருதுகின்றனர். தீவிரவாதிகளின் புதிய நிபந்தனை குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று கூறியஅவர், நிபந்தனை என்னவென்பதைக் கூற மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications