நக்ஸல்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் 35 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்ததகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் தலைமை தபால் அலுவலக அதிகாரி பாலாஜிக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தைஆட்சிப்பாக்கம் மக்கள் போர்க்குழு உறுப்பினர்களான சங்கர் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் எழுதியதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், நாங்கள் கூட்டாக சாராய வியாபாரம் செய்து வந்தோம். விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்கடுமையான நடவடிக்கையின் காரணமாக எங்களுக்கு ரூ. 5 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

இதைக் கண்டித்து திண்டிவனம் நகரமே குலுங்கும் அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்த முடிவுசெய்துள்ளோம்.

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் 10 வெடிகுண்டுகளும், மேலும் 30 இடங்களில் கண்ணி வெடிகளையும் புதைத்துவைத்துள்ளோம். மொத்தம் 35 இடங்களில் வெடிகுண்டுகளையும், கண்ணி வெடிகளையும் புதைத்துவைத்துள்ளோம்.

தபால் நிலையம், தியேட்டர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், நீதிமன்றம் எனஅனைத்து அரசு அலுவலகங்கள், கட்டடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சித் தலைவர்,காவல்துறைக் கண்காணிப்பாளர், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம் என்றுகூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நக்ஸலைட்டுக்கள் பெயரில் கள்ளச்சாரயகும்பல் தான் இந்த மிரட்டலை விடுத்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+