ஜப்பான் அணு உலையில் விபத்து: நால்வர் பலி
டோக்யோ:
ஜப்பானின் அணு மின் நிலையத்தில் நீராவி இயந்திரம் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பலியாயினர். மேலும் 7 பேர்படுகாயமடைந்தனர். இந்த எந்திரத்தில் இருந்து வெளியேறிய நீராவியில் அணுக் கதிர் வீச்சு ஏதும் இல்லை எனஅந் நாட்டு அரசு கூறியுள்ளது.
டோக்யோவில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள மிகாமா என்ற இடத்தில் உள்ள இந்த அணு மின்நிலையத்தில் நேற்று இந்த விபத்து நடந்தது. நாகசாகியில் அமெரிக்கா அணு குண்டு போட்டதன் 50வது ஆண்டுதினத்தை ஜப்பான் நினைவுகூர்ந்து கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் நடந்தது.
அணுக் கதிர்வீச்சு ஏதும் வெளியேறாததால், இந்த நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியினர் யாரையும் பாதுகாப்பானஇடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எழவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது.
நீராவியால் உடல் வெந்து 4 பேர் இறந்ததாகவும், மேலும் ஒருவர் படுகாயமுற்றுள்ளதாகவும் ஜப்பான் கூறியுள்ளது.இது தவிர 6 பேரும் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் நடந்தவுடன் அணு மின் உலை தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
1999ம் ஆண்டில் டோகாய்முரா அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாயியினர்.நூற்றுக்கணக்கானவர்கள் கதிர்வீச்சுக்கு உள்ளாகியினர்.












Click it and Unblock the Notifications