For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூரை உறிஞ்சும் அரசு: விவசாயிகள் கோபம்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரை தமிழக அரசு அதிகஅளவு எடுப்பதை எதிர்த்து மாபெரும் விவசாயிகள் போராட்டம் ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் தேவைக்காக புதிய வீராணம் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. ஆனால் வீராணம்ஏரியில் போதிய நீர் இருப்பு இல்லாததால், நெய்வேலி அருகே உள்ள கிராமங்களிலிருந்து ஆழ்குழாய்க்கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்படுகிறது.

45 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு ராட்சத பம்ப் செட்டுகள் மூலம் நீர் உறிஞ்சப்படுகிறது. இந்த நீர் ராட்சதகுழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர்த் தேவைக்காககடலூர் மாவட்ட நிலத்தடி நீரை தமிழக அரசு அதிக அளவில் சுரண்டுவதற்கு அம்மாவட்ட விவசாயிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் கடலூர் மாவட்டம் கடம்புலியூரில் பல்வேறு விவசாய அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின்ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், புதிய வீராணம் திட்டத்தை உடனடியாக அரசுகைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில், பண்ருட்டி-வடலூர் நெடுஞ்சாலையில் 40க்கும் மேற்பட்டஇடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை அரசு சுரண்டி வருவது கண்டனத்துக்குரியது என்றும்

ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் இப்பிராந்தியத்தில், நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்துபோய் விட்டது. தற்போது ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் சென்னைக்கு தண்ணீர் உறிஞ்சப்படுவது தொடர்ந்தால்இன்னும் ஒரு ஆண்டில் கடலூர் மாவட்டமே நிலத்தடி நீரின்றி வறண்டு போய் விடும் என்றும் விவசாயிகள் கவலைதெரிவித்தனர்.

அரசின் போக்கைக் கண்டித்து வருகிற 26ம் தேதி பண்ருட்டியில் அனைத்து விவசாயிகளையும் திரட்டி மாபெரும்ஆர்ப்பாட்டத்தை நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X