மதுரை இளைய ஆதீனம் திடீர் நீக்கம்
மதுரை:
இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன், இன்று இளவரசுபட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுதொடர்பாக மதுரை ஆதீனம் கூறியதாவது:
திருநெல்வேலியை சேர்ந்த சங்கர வடிவு அம்மாள்-- கோவிந்தசாமி பிள்ளை தம்பதியின் மகன் சுவாமிநாதன் கடந்தஜூன் மாதம் 5ம் தேதி மதுரை இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டார். ஆதீனத்திற்கு உதவியாக இருப்பார்என்று கருதி அவருக்கு பட்டம் சூட்டப்பட்டது.
ஆனால் அவர் எந்த வகையிலும் ஆதீனத்தின் சமயப்பணி, சமுதாயப் பணி மற்றும் நிர்வாகப்பணிகளுக்குஉதவியாக இல்லை. அவர் தனது குடும்ப நலனுக்காக செயல்பட்டார். அவரது குடும்பத்தினர் ஆதீன நிர்வாகத்தில்தலையிட்டு இடையூறு செய்தார்கள்.
ஆதீன நலனுக்கு அவருடைய செயல்பாடு சரியானதாக இல்லை. எனவே இளவரசு பட்டத்தில் இருந்து அவரைஇன்று நீக்கிவிட்டோம். ஆதீனம் தொடர்பாக யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
மதுரை ஆதீனத்தின் இந்தப் போட்டியின் போது, சுவாமிநாதன் வெளியூர் சென்றிருந்தார்.












Click it and Unblock the Notifications