ஆக.15: சென்னையில் ஹெலிகாப்டரில் போலீஸ் ரோந்து
சென்னை:
சென்னையில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை போலீஸ் கமிஷ்னர் நடராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடற்படையினர் மெரீனா கடற்பகுதியில் விஷேச படகில் ரோந்து பணியில் ஈடுபடுவர்.
மேலும் ஹெலிகாப்டர் ரோந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகளிலும், நுழைவுசாலைகளிலும் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
நீதிமன்றத்தில் பாதுகாப்பு அளிப்பது குறித்து தலைமை நீதிபதியுடன் பேசினேன். தேவைப்பட்டால் அங்கு கூடுதல்போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இணை ஆணையர் சுனில்குமார் அறிக்கைதயாரித்து வருகிறார். அந்த அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications