சமையல் எரிவாயு விலை மாதம் ரூ.4 உயர்வு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சமையல் எரிவாயு விலையை மாதம் ரூ.4 உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சமையல் எரிவாயு விலையில் தற்போது ஒரு சிலிண்டருக்கு ரூ.112.80 இழப்பு ஏற்படுகிறது. இதை ஈடு செய்யவரும் அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.4 அல்லது 3மாதங்களுக்கு ஒரு முறை ரூ.12 உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதேபோல் மண்ணெண்ணைய் விலையில் ஏற்படும் ரூ.8.30 இழப்பை ஈடு செய்ய் லிட்டருக்கு 20 காசுகள் அல்லது3 மாதங்களுக்கு ஒருமுறை 60 காசுகள் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணைய் விலைகளை உயர்ததுவதால் அவற்றுக்குஅளிக்கப்படும் மானியம் நடப்பு ஆண்டில் ரூ.4,567 கோடியாகவும், அடுத்த ஆண்டு 3,258 கோடியாகவும்,அதற்கு அடுத்த ஆண்டு ரூ.1,749 கோடியாகவும் குறையும்.












Click it and Unblock the Notifications