பொன்முடி மீது புதிய வழக்கு
விழுப்புரம்:
காவல்துறை அனுமதியின்றி சைக்கிள் பேரணி நடத்தியதாக முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மீது விழுப்புரம்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் நகரில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள திமுக சிறப்பு மாநாட்டையொட்டி, சென்னை உள்படதமிழகத்தின் பல நகரங்களிலும் சைக்கிள் பேரணியை திமுகவினர் நடத்தினர்.
விழுப்புரத்திலும், சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள்அமைச்சருமான பொன்முடி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிச் சென்றார்.
இந் நிலையில், அனுமதியின்றி இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டதாகக் கூறி விழுப்புரம் டவுன் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் புகார் செய்தார். இதையடுத்து பொன்முடி, நகராட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications