கருணாநிதி அரசியலில் இருந்து விலகலாம்: அதிமுக
சென்னை:
தவறான தகவல்களை பொதுமக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, பொதுவாழ்வில் இருந்து விலகுவது குறித்து யோசிக்கலாம் என்று தமிழக நிதியமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தணிக்கை அதிகாரிக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதா பத்திரிக்கைகளில் கொடுத்த விளம்பரத்தில்இருந்த உண்மையை கருணாநிதியால் தாங்க முடியவில்லை.
ஆனால் அதைத் திசை திருப்பும் விதமாக, விளம்பரத்துக்கு ஆகும் செலவைப் பற்றிக் கவலைப்படுவதாககூறியுள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமையை சீர் குலைத்து விட்டுச் சென்ற பெரிய மனிதர்தான் இப்போது, அரசின்செலவைப் பற்றிக் கவலைப்படுகிறார்.
கருணாநிதியின் கோயபல்ஸ் வகை அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா தூள் தூளாக அடித்து நொறுக்கியதைஅவரால் தாங்க முடியவில்லை.
2003-04ம் ஆண்டிற்கான நிதி நிலைப் புள்ளி விவரங்கள் இன்னும் சட்ட சபையில் சமர்ப்பிக்காத நிலையில்,கருணாநிதி அவற்றைப் பற்றி தப்பும் தவறுமாகக் கூறுவது வேடிக்கையளிக்கிறது. இதிலிருந்து, அவர் சரியாகஹோம் ஒர்க் செய்யவில்லை என்று தெரிகிறது.
பொது வாழ்க்கையில் இருந்து விலகுவது குறித்து கருணாநிதி தீவிரமாக யோசிக்கலாம் என்று கூறியிருக்கிறார்பொன்னையன்.












Click it and Unblock the Notifications