சென்னை: ஸ்பென்சர் பிளாசாவில் வெடிகுண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையின் மிகப் பெரிய வணிக வளாகமான ஸ்பென்சர் பிளாசாவில் வெடிகுண்டு புரளி ஏற்பட்டதால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ளது ஸ்பென்சர் பிளாசா. நகரின் மிகப் பெரிய வணிக வளாகமான இதில்,வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மற்றும் பேக்ஸ் மூலம் தகவல் வந்தது.

இதையடுத்து ஸ்பென்சர் பிளாசாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வரவழைக்கப்பட்டனர். கட்டடம்முழுவதும் இருந்த வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் நூற்றுக்கணக்கானோர் அண்ணா சாலைக்கு அருகே கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும், கடையிலும் தீவிர சோதனைநடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

வழக்கம்போல இதுவும் புரளி எனத் தெரிய வந்தது. இருப்பினும் புரளியைக் கிளப்பியது யார் என்பது குறித்துபோலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+