72 வயதில் விபசார விடுதி நடத்திய ஆசிரியர் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

72 வயதான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சென்னையில் விடுதி வைத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.அவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். 72 வயதாகும் இவர் ஓய்வு பெற்றதலைமை ஆசிரியர். இவரது மனைவி மேரி, எல்.ஐ.சி. முகவராக இருந்தவர்.

ஸ்டீபன்ராஜ் வீடு பிடித்து அதில் பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக மாநகர காவல்துறை ஆணையர்நடராஜனுக்கு புகார் மேல் புகாராக சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் விபச்சாரத் தடுப்பு போலீஸ்உதவி ஆணையர் ஆறுமுகச்சாமி தலைமையில் போலீஸ் படை ஸ்டீபன் ராஜ் வீட்டுக்கு விரைந்தது.

வீட்டில் விபச்சாரத்திற்குத் தயாராக இருந்த மாலினி, ராணி ஆகிய இளம் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.விபச்சார விடுதி நடத்தி வந்த ஸ்டீபன்ராஜையும் போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையின்போது, ஸ்டீபன் ராஜின் மனைவி மேரி ஏற்கனவே விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். அந்த அனுபவத்தை வைத்தும், அதிக அளவில் பணம் கிடைத்ததாலும், விபச்சார விடுதியைநடத்தியதாக ஸ்டீபன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+