நீக்கியது செல்லாது: மதுரை இளைய ஆதீனம்
திருத்துறைப்பூண்டி:
மதுரை ஆதீனம் என்னை நீக்கியது சட்டப்படி செல்லாது என பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இளைய ஆதீனம்கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருநெல்வேலியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் சமீபத்தில் முடிசூட்டப்பட்டார். இதுதொடர்பாக மதுரை ஆதீனகர்த்தர், அதிகாரப்பூர்வமாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
இந் நிலையில், இளைய ஆதீனகர்த்தரின் குடும்பத்தினர், ஆதீன நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், இளையஆதீனம் தனது சமயப் பணிகள் குறித்து அக்கறை காட்டாமல் இருப்பதாகவும் கூறி அவரை நேற்று அதிரடியாகபதவிநீக்கம் செய்தார் மதுரை ஆதீனம்.
இந்த நீக்கம் குறித்து திருத்துறைப்பூண்டியில் இருக்கும் இளைய ஆதீனம் கருத்து தெரிவிக்கையில், இது சட்டப்படிசெல்லாது. எனக்கு இளவரசு பட்டம் சூட்டி, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்த பின், என்னை நீக்குவதாகஅறிவித்துள்ளது நியாயமற்றது, சட்டப்படி செல்லாதது.
எனது குடும்பத்தினர் ஆதீன நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறுவதில் உண்மையில்லை. நான் துறவறம் பூண்டவன்,குடும்ப பந்தங்களை உதறி விட்டேன். துறவறத்தை கைவிடப் போவதும் இல்லை.
என்னை மீண்டும் மூத்த சன்னிதானம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுத்து அறிவிப்பேன் என்றார் அவர்.
அண்மைக் காலமாக சேலம் குட்டிச் சாமியாருக்கு குருவாக மதுரை ஆதீனம் மாறியுள்ள பின்னணியில், ஆதீனஇளவரசு பட்டத்திலிருந்து இளைய ஆதீனத்தை பதவி நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications