திண்டுக்கல்லில் கள்ள நோட்டு கும்பல் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 5 பேரை சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்த ரூ. 24 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், கள்ள நோட்டு அடிக்க தயாரிக்கப்பயன்படுத்திய கம்ப்யூட்டர் , லேசர், ஸ்கேனர் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.
திண்டுக்கல்லில் ஒரு கும்பல் கள்ள நோட்டுகள் அச்சடித்து வெளிமாநிலங்களில் புழக்கத்தில் விடுவதாக சென்னைசி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இக் கும்பலைப் பிடிக்க ஒரு தனிக் குழு நியமிக்கப்பட்டது. இந்நிலையில் கள்ள நோட்டு கும்பலைசேர்ந்த சடையாண்டி என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீஸார் அவர் மூலமாக மற்றவர்களைவளைத்துப் பிடித்தனர்.
திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியில் உள்ள ஒரு வாடகை பங்களாவில் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய்கட்டுகள், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் கட்டுகள், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 50 ரூபாய் கட்டுகள்கைப்பற்றப்பட்டன. கள்ள நோட்டு அடிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், லேசர், ஸ்கேனர் கருவிகளும்கைப்பற்றப்பட்டன.
கள்ள நோட்டுக் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஜபருல்லாகான் (56),சித்தையன் கோட்டையை சேர்ந்த சடையாண்டி (25), விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (46), மதுரைகட்ராபாளையம் பகுதியைச் சேர்ந்த மதன் சேட் (35), தக்காராம் சேட் (35) ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications