புகாரை ஜெ. நிரூபிக்க வேண்டும்: பாஜக
சென்னை:
தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டபடி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடந்ததாகக் கூறிய புகாரைமுதல்வர் ஜெயலலிதா நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரசும் பாஜகவும் வலியுறுத்தியுள்ளன.
அகில இந்திய பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகப் புகார் கூறியவர் சாதாரண நபர் அல்ல. தமிழக முதல்வர்.தேர்தல் ஆணையம் மீது அவர் கூறியது பயங்கரமான குற்றச்சாட்டு ஆகும்.
அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரத்தையும் எடுத்து சோதனைசெய்யலாம் என்று தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
இந்த வாய்ப்பை ஜெயலலிதா பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தைப்பகிரங்கமாக சோதனை செய்து தான் கூறிய புகாரை நிரூபிக்க வேண்டும். வாக்களிப்பதில் மக்களுக்குநம்பிக்கையை ஏற்படுத்த, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சோதனை செய்ய ஜெயலலிதா முன்வரவேண்டும் என்று கூறினார்.
காங்கிரஸ் வலியுறுத்தல்:
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா கூறிய புகாரைத்தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பது, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு முதல்வர், தேர்தல் ஆணையத்தின் மீது புகார்களை அள்ளித் தெளிப்பதுஜனநாயகத்தைப் பலவீனமாக்கும்.
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அதிமுகவும்,ஜெயலலிதாவும் தயாரா என்று கேட்டிருக்கிறார்.