For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படலாம்: ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அண்ணாநிர்வாகவியல் கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா நிர்வாகவியல் கழக திட்ட இயக்குநர் அரசு சுந்தரம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,இந்தியாவில் 22 இடங்கள் இயற்கை சீரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை என்றுகண்டறியப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி மற்றும் மேலும் 3 மாவட்டங்களில் பூகம்பம்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கைக் சீற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம். அதுதொடர்பான பணிகளில் மாநில அரசுகள் முழுமையாக ஈடுபட வேண்டும்.

இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 16 சதவீத நிலப்பரப்பு வறட்சியால் வாடிக் கொண்டுள்ளது. இதனால்ஆண்டுதோறும் 5 கோடி மக்கள் வறுமையால், வாடி வருகின்றனர், பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகிறார்கள்என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X