சேலம்: குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை
ஓமலூர்:
பணக்கஷ்டம் காரணமாக, சேலம் அருகே குழந்தையைக் கொன்று விட்டு கணவன், மனைவி இருவரும்தற்கொலை செய்துகொண்டனர்.
சேலம் அருகே ஓமலூரை அடுத்த கொங்குபட்டியைச் சேர்ந்த டெய்லர் ஆறுமுகம் (27). இவர் கால் ஊனமானவர்.இவரது மனைவி சத்யா (25). இவர்களுக்கு ஆர்த்தி (4) என்ற மகளும், சஞ்சய் என்ற ஒன்றரை வயது மகனும்உள்ளனர்.
டெய்லர் தொழிலில் வருமானம் இல்லாததால், ஆறுமுகம் தனது மாமனாரிடம் ரூ.2,000 ரூபாய் கடன் கேட்டார்.ஆனால் அவர் கடன் தர மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து விட்டு, மனைவியுடன் சேர்ந்து தானும் விஷம் குடித்தார். இதில்ஆறுமுகம், சத்யா, சஞ்சய் ஆகியோர் இறந்தனர். உயிருக்குப் போராடும் நிலையில் ஆர்த்தி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.