வடிவேலுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
சென்னை:
ரூ.5 லட்சம் பணம் கேட்டு நடிகர் வடிவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவகங்கை வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
நடிகர் வடிவேலு சாலிக்கிராமம் லோகையா காலனி, 4வது குறுக்கு தெருவில் தங்கியிருக்கிறார். அவரது வீட்டில்சமீபத்தில் ஒரு மர்ம நபர் ஒரு கடிதத்தை வீசிவிட்டுச் சென்றார். அந்தக் கடிதத்தில்,
வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு, எனக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு வெடிகுண்டுவைத்து குடும்பத்தையே கொன்று விடுவேன். கே.கே. நகர் சகாத்தம்மன் கோவில் அருகே பணத்துடன்வரவேண்டும். இதை வெளியில் சொன்னால் குடும்பம் சீரழிந்து விடும். இப்படிக்கு மர்ம கும்பல் என்று எழுதப்பட்டுஇருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வடிவேலு போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து வடிவேலு வீட்டு அருகே மப்டிபோலீசார் நிறுத்தப்பட்டனர்.
மாலை 5 மணிக்கு வாலிபர் ஒருவர் சைக்கிளில் வடிவேலு வீட்டுக்கு வந்து, வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு தாளைபோட்டு விட்டு ஓட முயற்சித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் வீசிய தாளில், ரூ.5 லட்சம்பணத்துடன் வராவிட்டால், காலை 10 மணிக்கு குண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் அய்யன்பாண்டி (20) என்றும், சிவகங்கை மாவட்டம்வெள்ளிக்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. சினிமா ஆசையில் சென்னை வந்த அவர்,இங்கு தச்சு வேலை பார்த்து வந்திருக்கிறார். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பி, வடிவேலுவுக்கு மிரட்டல்கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யாராவது நடிகர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை என்று வடிவேலுகூறியுள்ளார். வடிவேலுவுக்கும் கோடம்பாக்கத்தில் பல குட்டி, பெரிய காமெடி நடிகர்களுக்கும் ஏழாம் பொருத்தம்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications