குட்டி சாமியாருக்கு பட்டமா?: ஆதீனம் மறுப்பு
மதுரை:
சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக ம முடிசூட்டும் எண்ணம் இல்லை என்றுமதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தின் வாரிசாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுவாமிநாதன் திடீரென்று அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.சுவாமிநாதனின் குடும்பத்தினர், ஆதீன நிர்வாகத்தில் தலையிடுவதாக வந்த தகவலால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக மூத்தஆதீனம் கூறியிருந்தார்.
ஆனால், திடீரென்று பிரபலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகளை, மதுரைஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவிப்பதற்காகவே சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்துள்ளதாக மதுரை ஆதீனம் குறித்துக்கூறப்படுகிறது.
ஆனால் இதை மதுரை ஆதீனம் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சேலம் பால சாமியார் பரணீதர சுவாமிகளைஇளைய சன்னிதானமாக பட்டம் சூட்டஇந்த பதவி நீக்கம் நடைபெறவில்லை. அதுபோன்ற எண்ணம் நமக்கு இல்லை.
அதற்கான அவசியம் இப்போது ஏற்படவில்லை. இவ்வாறு பரவும் தகவல் தவறானது. இப்போதைக்கு இளைய சன்னிதானமாகயாரையும் நியமிக்கும் எண்ணம் நமக்கு இல்லை.
சுவாமிநாதன் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான். அதில் மாற்றம் இல்லை. அதற்கு எனக்கு முழு உரிமையும் உள்ளது. இதற்காகஅவர் நீதிமன்றத்தை அணுகினாலும் நமக்குக் கவலையில்லை என்றார் மதுரை ஆதீனம்.