ஒலிம்பிக்ஸ்: இரண்டு தோல்விகளுடன் இந்தியா
ஏதென்ஸ் :
ஏதென்ஸ் ஒலிம்பிக்கின் துப்பாக்கி சுடும் போட்டியிலும், ஜூடோ மல்யுத்தப் போட்டியிலும் இந்தியா வீரர்கள்தோல்வியைத் தழுவினர்.
ஒலிம்பிக் 2004 போட்டிகள் ஏதென்ஸ் நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில்இந்தியத் தேசியக் கொடியை தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் ஏந்திச் சென்றார்.
இன்று நடைபெற்ற 10 மீட்டர் தூரத்திற்குரிய துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அஞ்சலி பகவத்கலந்து கொண்டார். தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.
சீன நாட்டைச் சேர்ந்த நடப்புச் சாம்பியன் டு லீ தங்கப் பதக்கத்தினை வென்று, இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல்தங்கத்தினை பெறும் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோவில் இந்தியா வீரர் ஜூடோகா அக்ரம் ஷா, மங்கோலிய வீரர்காஸ்பாட்டரிடம் தோற்றார்.
டேபிள் டென்னிசில் இந்திய வீரர் சரத் கமல், அல்ஜீரியாவைச் சேர்ந்த முகமது பவுட்ஜாட்ஜா வை 4 - 1 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.












Click it and Unblock the Notifications