வள்ளுவர் சிலைக்கு ரூ. 27 லட்சத்தில் வேதிப் பூச்சு
சென்னை:
கன்னியாகுமரி கடல் பாறை மீது நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரூ. 27.73 லட்சம் செலவில் பாலி சிலிக்கான் என்ற வேதிப்பொருள் பூசப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு அருகே உள்ள பாறையில் திருவள்ளுவரின் 133 அடி கம்பீர சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச்சிலை திமுக ஆட்சியில் நிறுவப்பட்டதால், அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அதை முறையாகப் பராமரிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
கடல் உப்புக் காற்றினால் சிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், எனவே வேதிப் பொருள் பூசப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர்கருணாநிதி, சிலையை உருவாக்கிய கணபதி ஸ்தபதி உள்ளிட்டார் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந் நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரூ. 27.73 லட்சம் மதிப்பில் பாலி சிலிக்கான் என்ற வேதிப் பொருளை பூசவுள்ளதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளது.
ஆகஸ்ட் 22ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை வேதிப்பொருள் பூசும் பணி நடைபெறும். இந்த கால கட்டத்தில் சிலைக்கு அருகேசெல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications