வள்ளுவர் சிலைக்கு ரூ. 27 லட்சத்தில் வேதிப் பூச்சு
சென்னை:
கன்னியாகுமரி கடல் பாறை மீது நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரூ. 27.73 லட்சம் செலவில் பாலி சிலிக்கான் என்ற வேதிப்பொருள் பூசப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு அருகே உள்ள பாறையில் திருவள்ளுவரின் 133 அடி கம்பீர சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச்சிலை திமுக ஆட்சியில் நிறுவப்பட்டதால், அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அதை முறையாகப் பராமரிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
கடல் உப்புக் காற்றினால் சிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், எனவே வேதிப் பொருள் பூசப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர்கருணாநிதி, சிலையை உருவாக்கிய கணபதி ஸ்தபதி உள்ளிட்டார் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந் நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரூ. 27.73 லட்சம் மதிப்பில் பாலி சிலிக்கான் என்ற வேதிப் பொருளை பூசவுள்ளதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளது.
ஆகஸ்ட் 22ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை வேதிப்பொருள் பூசும் பணி நடைபெறும். இந்த கால கட்டத்தில் சிலைக்கு அருகேசெல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நான் பிரச்சாரம் செய்கிறேனா? எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications