12 குழந்தைகளும் டிஸ்சார்ஜ் ஆகினர்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 குழந்தைகளும் குணமாகிவீடு திரும்பியுள்ளனர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளிக்கூட தீவிபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். 12 குழந்தைகள் தஞ்சைமற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அஜித் குமார், சூசை மேரி, சரவணன், விஜய், விக்னேஷ்வரன், ஆனந்த், நவீனா, தேவி, கமலா, ரமேஷ்,விஷ்ணுப்பிரியா, சூர்யா ஆகிய மாணவ, மாணவியர் தற்போது பூரண குணமடைந்துள்ளனர். இதையடுத்துஅனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜே.ராதாகிருஷ்ணன் 12 குழந்தைகளுக்கும் இனிப்பு, உடை, பழம் ஆகியவற்றைவழங்கி வாழ்த்தி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications