For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலட்சுமி... வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை

Jayalakshmiதென் மாவட்ட காவல்துறையையே தனது முந்தானைக்குள் வைத்திருந்த சிவகாசி பெண்மணி ஜயலட்சுமி இன்றுகாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜரானார்.

அவரிடம் பிற்பகலில் வாக்குமூலம் கேட்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால், வாக்குமூலம் தரஜெயலட்சுமி 2 நாள் அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளார்.

இன்று காலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் காலையில் அவர் ஆஜரானார். அப்போது நீதிபதிகள்பாலசுப்ரமணியன், மாசிலாமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவரிடம் விசாரணை நடத்தியது. பின்னர்பிற்பகலில நீதிபதி பாலசுப்ரமணியம் அறையில் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிற்பகலில் ஜெயலட்சுமி நீதிபதி அறையில் ஆஜராகும்போது வாக்குமூலம் தர 2 நாள் அவகாசம் கேட்க முடிவுசெய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அழகிசாமி கூறியுள்ளார்.

மேலும், தன்னிடம் மோசடி செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகளிடம்ஜெயலட்சுமி கோரிக்கை வைப்பார் என்றார் அழகிசாமி.

வாக்குமூலம் தரப்போகும் ஜெயலட்சுமி, அப்போது வெளியிடப்போகும் காவல்துறையினரின் பெயர்களைஅறிவதற்காக தமிழகமே மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.

இதுவரை 20 பேரை கல்யாணம் செய்துள்ளதாகவும், எஸ்.பி. முதல் சாதாரண ஏட்டு வரை தனது கருப்புக்கவர்ச்சியால் வளைத்துப் போட்டு பல விஷயங்களை சாதித்துள்ளதாகக் கூறப்படும் ஜெயலட்சுமி தற்போதுஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ஜெயலட்சுமி விவகாரத்தையடுத்து நாறிப் போயுள்ள தென் மாவட்ட காவல்துறையின் இமேஜ் அவரதுவாக்குமூலத்திற்குப் பிறகு இன்னும் மோசம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X