For Daily Alerts
Just In
தீயில் கருகிய தேசியக் கொடி!
கடலூர்:
கடலூரில் அரசு அலுவலக வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி மர்மமான சூழலில் தீயில் கருகியது.
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில், திட்ட அதிகாரி ஜெகந்நாதன் சுதந்திர தினத்தைமுன்னிட்டு, நேற்று காலை 8.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர்.
பகல் 11 மணியளவில் தேசியக் கொடி தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து தேசியக் கொடிஉடனே கீழே இறக்கப்பட்டது. கொடியின் நடுப்பகுதியும், அசோக சக்கரமும் முழுமையாக எரிந்து போயிருந்தது.
கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியில் எப்படி தீ பிடித்தது என்று தெரியவில்லை. இது குறித்து போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Monday, August 16, 2004, 5:30 [IST]