தடையை மீறிய லாரி மோதி மாணவி பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் விதிமுறைகளை மீறி நகருக்குள் வந்த சரக்கு லாரி மோதி பிளஸ் டூ மாணவி பரிதாபமாக இறந்தார்.
மதுரை நகருக்குள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை லாரிகள் போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடையை மீறி போக்குவரத்து காவலர்களுக்கு பணம் கொடுத்து விட்டு பலலாரிகள் நகருக்குள் ஓடி வருவது குறித்து பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று காலை சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி நகருக்குள் வந்தது. வேகமாக வந்த லாரிடி.வி.எஸ். மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த சிவசங்கரி என்ற மாணவி மோதியது. இதில் சிவசங்கரிபரிதாபமாக பலியானார்.
லாரி மோதி மாணவி இறந்ததையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.












Click it and Unblock the Notifications