இந்தியர் குடும்பத்துடன் குவைத் நிறுவனம் பேச்சு

Subscribe to Oneindia Tamil

குவைத்:

இராக் தீவிரவாதிகள் வசமுள்ள பிணைக்கைதிகளை மீட்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,எனவே பிணைக்கைதி அந்தர்யாமியின் பெற்றோர்கள் தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்என்றும் குவைத் லாரி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக குவைத் மற்றும் கல்ப் லிங்க் போக்குவரத்து நிறுவனம் அந்தர்யாமியின் பெற்றோரைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது. இச் செய்தியை, அந் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராணாஅபு சைனே நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பிணைக் கைதிகளை பத்திரமாக விடுவிக்க நாங்கள் முழு முயற்சிகள் எடுத்து வருவதாக அந்தர்யாமியின்பெற்றோரிடமும், உறவினர்களிடமும் உறுதி தெரிவித்தோம்.

எங்களை நம்புமாறும், எங்களது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம்.மேலும் அவர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டோம்.

இந்த உண்ணாவிரதத்தால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படும் என்றும், விடுதலைக்குப் பின் அவர்களைப்பார்க்க வரும் அந்தர்யாமி அதை விரும்ப மாட்டார் என்றும் கூறினோம்.

பேச்சுவார்த்தை முறிந்ததையடுத்து தீவிரவாதிகளுடன் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. பலூஜா நகரில்நிலைமை மோசமாக உள்ளது. இது எங்களது முயற்சிகளில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும்,இந்தப் பிரச்சினையில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.

தீவிரவாதிகள் மேலும் ஒரு புதிய நிபந்தனையை விதித்ததையடுத்து, கடந்த 7ம் தேதி பேச்சுவார்த்தையிலிருந்துகுவைத் நிறுவனம் விலகியுள்ளது. தீவிரவாதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும்தெரிவித்தது.

இதனையடுத்து கடந்த 10 நாட்களாக பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+