கும்பகோணம்: கல்வி அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளித் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு அரசு அதிகாரிகளின்ஜாமீன் மனுக்களையும் மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள்உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அதிகாரிநாராயணசாமி, முன்னாள் உதவிக் கல்வி அதிகாரி மாதவன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பழனிச்சாமிஆகியோர் தங்களை ஜாமீனில் விடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களை ஜாமீனில் விட அரசு வழக்கறிஞர் ராஜா எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். வாதங்களை கேட்ட நீதிபதி,நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications