மாறன் தபால் தலை: சென்னையில் சோனியா
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தபால் தலையை வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சென்னை வந்தார்.
மாறன் நினைவாக மத்திய தகவல் தொடர்புத் துறை இந்த தபால் தலையை வெளியிடுகிறது. இந்தத் துறையின்அமைச்சராக இருப்பது மாறனின் மகன் தயாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை சென்னை வந்த சோனியா காந்தி, கோபாலபுரத்தில் உள்ள முரசொலி மாறனின் இல்லத்துக்குச் சென்றுஅவரது மனைவியைச் சந்தித்துப் பேசினார். 35 நிமிடங்கள் நடந்த இச் சந்திப்பின்போது திமுக தலைவர்கருணாநிதியும் உடனிருந்தார்.
இதைத் தொடர்ந்து மாறன் நினைவு தபால் தலையை வெளியிட அண்ணா அறிவாலயத்துக்கு சோனியாவும்,கருணாநிதியும் புறப்பட்டுச் சென்றனர்.
தபால் தலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட, தபால் உறையை மக்களவை சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜி வெளியிடுகிறார். திமுக தலைவர் கருணாநிதி பெற்றுக் கொள்கிறார்.
முன்னதாக இன்று காலை முரசொலி பத்திரிக்கை அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாறனின் சிலையைகருணாநிதி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், பன்முகம் கொண்டிருந்த முரசொலி மாறன் சிறந்த பத்திரிக்கையாளராகவும்திகழ்ந்தார். வெறும் பத்திரிக்கையாளராக மட்டுமல்லாது நல்ல பகுத்தறிவாளராகவும் விளங்கினார் என்றுமுரசொலி மாறனுக்குப் புகழாரம் சூட்டினார்.
சிலை திறப்பு நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, முரசொலி மாறனின் மகன் தயாநிதிமாறன், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, தமிழக காங்கிரஸ்பொறுப்பாளர் சல்மான் குர்ஷித் ஆகியோரும் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசிய சாட்டர்ஜி,
மாறன் எனது நீண்ட கால நண்பர், அவரது தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமைகொள்கிறேன். மக்களவை வரைமுறைகளுக்கு உட்பட்டு அவையை நான் நடத்துகிறேன். எல்லா விவாதங்களிலும்அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பேச அனுமதியளித்து வருகிறேன் என்றார்.
மத்தியில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் பதவியேற்ற பின் சோனியா காந்தி சென்னைவருவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து கோஷ்டிகளும்தடபுடலான வரவேற்பு வழங்கினர்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications