சின்னதம்பி நடிகர் உதய பிரகாஷ் சாவு
சென்னை:
சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்த உதய பிரகாஷ், மர்மமான முறையில்இறந்து கிடந்தார்.
சின்னதம்பி, மன்னன், கட்டபொம்மன் உள்பட பல படங்களில் உதய பிரகாஷ் வில்லன் வேடத்தில்நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், மிகுந்த பணக் கஷ்டத்தில்இருந்தார்.
நண்பர்கள், உறவினர்கள் கைவிட்ட நிலையில், சேலம் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பெண்ணின் ஆதரவில்வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அவரது நிலை குறித்து அறிந்த நடிகர் சரத்குமார் தனது அரசுபடத்தில் நடிக்க வைத்தார்.
ஆனால் அதன் பிறகும் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மனக்கஷ்டம் அடைந்த அவர் அளவுக்கு அதிகமாககுடித்து ரோட்டு ஓரங்களிலும் விழுந்து கிடந்தார். இந் நிலையில் ஆஸ்துமாவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இன்று காலை நடிகர் சங்கம் அருகில் ரோட்டில் உதய பிரகாஷ் சுயநினைவின்றி விழுந்து கிடந்தார். இதுபற்றிதகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். நடுத்தரவயதினரான உதய பிரகாஷ், ஆஸ்துமா மற்றும் அதிக போதை காரணமாக இறந்திருக்கலாம் என்று போலீஸார்கருதுகின்றனர்.
அவரது உடல் சொந்த ஊரான ஊட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் நெப்போலியன்அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு சின்னதம்பி பட இயக்குனர் வாசு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மணிகண்டன் என்ற உதயபிரகாஷ் சட்டம் படித்தவர். சினிமா ஆசையால் சென்னை வந்து நியாயத் தராசு படத்தில்வில்லனாக அறிமுகமானார்.












Click it and Unblock the Notifications