குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் முகம்மது அலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் சிபிசிஐடிடிஐஜி முகம்மது அலி மறுத்துள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளஅலியின் ஜாமீன் மனுக்கள் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

இந் நிலையில் முதன்மை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த அலிதானே நேரில் ஆஜராகி கூறியதாவது:

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிஜாமுதீனோ, அவரது மனைவியோ அல்லது பாலாஜியோஎனக்குப் பணம் தந்ததாக கூறவே இல்லை. அவர்களிடம் இருந்து நான் ரூ. 8 லட்சம் வாங்கியதாகசொல்லும் புகார் தவறானது.

இந்த வழக்கில் நான் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளேன். முத்திரைத் தாள் மோசடியைநான் முறையாகத் தான் விசாரித்தேன்.

அதே போல சிபிசிஐடி அலுவலகத்தில் கைப்பற்று வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள போலிமுத்திரைத் தாள்கள் காணாமல் போனதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

நிஜாமுதீன் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் ஆன பின்னரே அதை முறைப்படி நான் பதிவு செய்ததாககூறுகிறார்கள். உண்மையில் 2002ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி அவர் கைது செய்யப்பட்டபோதுநான் ஊரிலேயே இல்லை. அப்படி இருக்கையில் அவரது கைது விஷயத்தில் நான் எப்படி எந்தத்தவறும் செய்திருக்க முடியும்?.

இந்த வழக்கில் என்னுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் தரப்பட்டுவிட்டது. ஆனால், நான்கைதாகி 50 நாட்களாக சிறையில் இருந்து வருகிறேன். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரியானநான் வெளியில் வந்தால் எப்படி சாட்சியங்களைக் குலைக்க முடியும்?.

இதனால் என்னை ஜாமீனில் விட வேண்டும் என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமையும்தொடரும் என்று அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+