காவிரி நடுவர் மன்றம்: தமிழக வருகை தடை
டெல்லி:
காவிரிப் படுகையில் உள்ள அணைக்கட்டுகள், காவிரிப் பாசனப் பகுதிகளைப் பார்வையிட நடுவர்மன்ற நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக நீதிபதி என்.பி. சிங்கின் உள்ளார். மன்றத்தின்உறுப்பினர்களாக நீதிபதிகள் என்.எஸ்.ராவ், சுதீர் நாராயணன் ஆகியோர் உள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் இருவரும் வரும் 23ம் தேதி முதல் தமிழக காவிரிப் பாசன பகுதிகளைபார்வையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு நடுவர் மன்றத் தலைவர் சிங்உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் வந்தன.
ஆனால், மன்ற உறுப்பினர்கள் தன்னையும் மீறி பாசனப் பகுதிகளைப் பார்வையிடவுள்ளதாகவும்,அதைத் தடுக்குமாறும் என்.பி.சிங் முறையிட்டார்.
இதையடுத்து அவர்கள் தமிழகம், கர்நாடகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளைப் பார்வையிட உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் 29ம் தேதி வரையும், கர்நாடகத்தில் அடுத்த மாதமும் இவர்கள் ஆய்வு நடத்தத்திட்டமிட்டிருந்தனர்.
இந்த நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைத் தர வேண்டும் எனகர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பை கர்நாடகம் மதித்ததே இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக மன்ற உறுப்பினர்கள் இருவரும் தமிழக, கர்நாடகப் பாசனப் பகுதிகள், அணைகளைபார்வையிட்ட பின் விரைவில் இறுதித் தீர்ப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications